காஞ்சிபுரம்: பஞ்சுப்பேட்டை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், உதவியாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், மூன்று தினங்களுக்கு, அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த பஞ்சுப்பேட்டை பகுதியில், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.இங்கு, உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அலுவலகத்தில் சிலருக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, வேளாண் அலுவலகம், மூன்று நாட்களுக்கு மூடப்பட்டு உள்ளது. கிருமி நாசினி மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுத்த பின், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என, அத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE