சென்னை; 'கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை, ரேஷன் ஊழியர்களை இடமாறுதல் செய்யக்கூடாது' என, மாவட்ட இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை, அந்த கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், தங்கள் விருப்பப்படி இடமாறுதல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊரடங்கால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள், நிவாரணத் தொகை வழங்கும் பணியை, ரேஷன் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, தேவை ஏற்படும் இடங்களை தவிர, மற்ற இடங்களில், ரேஷன் ஊழியர்களை இடமாறுதல் செய்வதை தவிர்க்குமாறு, உங்கள் மாவட்டத்தில் செயல்படும், அனைத்து சங்கங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குங்கள்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement