திருப்பூர்:நாட்டில் உள்ள காசநோயாளிகளை குணப்படுத்த, தீவிரம் காட்டப்படுகிறது.வரும் 2025க்குள், காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், 'தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம்' துவங்கப்பட்டது. இதன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விவரங்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.''கடந்தாண்டு, நாட்டில், 24.04 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது, 14 சதவீதம் அதிகம்.'நிக் ஷய்' முறையின் கீழ், காசநோயாளிகளுக்கு நிதியுதவி, இவர்களது, நேரடி வங்கி கணக்குக்கு அனுப்பப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும், 4.5 லட்சம் நேரடி கண்காணிப்பு சிகிச்சை மையங்கள்(டாட்ஸ்) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.கடந்தாண்டு, காசநோயாளிகளில், 81 சதவீதத்தினருக்கு, எச்.ஐ.வி., சோதனை நடத்தப்பட்டுள்ளது. 2018-ல் 57 சதவீதத்தினருக்குத் தான் நடத்தப்பட்டது'' என்று, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'காசநோயை குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையை, முதலில், காசநோயாளிகளிடம் விதைக்க வேண்டும். அவர்களை குணப்படுத்துவதன் மூலம், விழிப்புணர்வு பொதுமக்களிடமும் பரவும்,' என்கின்றனர், காசநோய் கட்டுப்பாட்டு திட்டக்குழுவினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE