கரூர்; மளிகை கடை வியாபாரி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர், புன்னம்சத்திரத்தைச் சேர்ந்த, 48 வயது ஆண், மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த, 28ம் தேதி காய்ச்சல் காரணமாக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் உயிரிழந்தார்.சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணையில், நொய்யலில் உள்ள ராஜேஷ் மருத்துவமனையில், வியாபாரி, 25, 26ம் தேதிகளில் சிகிச்சை பெற்றது தெரிந்தது.
இதைஅடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மருத்துவமனையை நடத்தி வந்த சண்முகம், 65, பிளஸ் 2 மட்டுமே படித்துள்ளார். பல ஆண்டு களுக்கு முன், தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது தெரிந்தது. சுகாதாரத் துறையினர் புகாரின் படி, போலி டாக்டர் சண்முகம் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், சண்முகம் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும், வரும், 11ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.'சண்முகத்துக்கு கொரோனா தொற்று உள்ளதா என, பரிசோதனை நடத்தப்பட்டு, கைது நடவடிக்கை இருக்கும்' என, போலீசார் தெரிவித்தனர்.சண்முகத்தின் மூத்த மகள் சித்த மருத்துவராகவும், இளைய மகள், எம்.பி.பி.எஸ்., டாக்டராகவும் உள்ளனர். இருவரும், தந்தை நடத்திய மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE