கோவை:கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், ஒரு வயது பெண் குழந்தை உட்பட நேற்று ஒரே நாளில், 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கோவை அரசு மருத்துவமனையில், 24 வயது பெண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இடையர்பாளையம், தேவாங்க நகரை சேர்ந்த, ஒரு வயது பெண் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. போத்தனுார் அழகு நகரை சேர்ந்த 32 வயது பெண், ஆர்.எஸ்.புரம்.,வி.வி.சி.,லே --அவுட்டை சேர்ந்த 31 வயது பெண், ஆகியோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்து, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.போத்தனுார் அழகு நகர், துடியலுார், விளாங்குறிச்சி, வடவள்ளி, செட்டி வீதி, தெலுங்கு வீதி, பீளமேடு, சுண்டக்காமுத்துார், வெள்ளக்கிணர் பிரிவு, மதுக்கரை, தெலுங்கு பாளையம், மசக்காளிபாளையம், பாலன் நகர் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம், 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 538 ஆக உயர்ந்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 13 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE