விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி பகுதியில் அம்மா ஸ்கூட்டி வாங்க, 32 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், சுயதொழில் புரிவோர், வேலைக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில், அம்மா ஸ்கூட்டி வாங்க, ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகராட்சி பகுதியில் வசிக்கும் 32 பயனாளிகள், தேர்வு செய்யப்பட்டு, நிதியுதவிக்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 32 பயனாளிகளுக்கும், நிதியுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு, ஒன்றிய சேர்மன் செல்லத்துரை, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பெரியசாமி, நகர துணை செயலர் சத்யாசெல்வம், அ.தி.மு.க., நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிமாறன், நகர மாணவரணி செயலர் செல்வகணபதி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE