கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வட்ட மார்க்கெட் கமிட்டி வேர்க்கடலை, எள் வியாபாரிகள் சங்கத்தினர் வரும் 10ம் தேதி வரை ஏலத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதில் கமிட்டி கண்காணிப்பாளர் உயர்ந்த விலை நிர்ணயிக்கப்பட்ட வியாபாரிக்கு பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.ஆனால், சமீப காலமாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால், விளைபொருட்களைக் கையாள்வதில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் பகுதிகளைச் சேர்ந்த கமிட்டி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று 1ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை கமிட்டியில் நடைபெறும் விலை நிர்ணயம் செய்யும் ஏலத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் விவசாயிகள் விளைபொருட்களை கமிட்டிக்கு கொண்டு வர கமிட்டி நிர்வாகத்தினர் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிகிறது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதில் கமிட்டி கண்காணிப்பாளர் உயர்ந்த விலை நிர்ணயிக்கப்பட்ட வியாபாரிக்கு பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.ஆனால், சமீப காலமாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால், விளைபொருட்களைக் கையாள்வதில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் பகுதிகளைச் சேர்ந்த கமிட்டி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று 1ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை கமிட்டியில் நடைபெறும் விலை நிர்ணயம் செய்யும் ஏலத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் விவசாயிகள் விளைபொருட்களை கமிட்டிக்கு கொண்டு வர கமிட்டி நிர்வாகத்தினர் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement