கள்ளக்குறிச்சி : கொரோனா தொற்று காரணமாக சுந்தர விநாயகர் கோவில் தெரு அடைக்கப்பட்டதால், சேலம் சாலையில் ஒரு வழி மட்டும் நேற்று திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி, நகரில் நான்கு வார்டுகளுக்குட்பட்ட 26 தெருக்கள், காய்கறி மார்க்கெட் மற்றும் நகரின் முக்கிய சாலையான சேலம் மெயின் ரோடு ஆகியவற்றில் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டன.மேலும், சேலம் மெயின்ரோட்டினை இணைக்கும் தெருக்களும் மூடப்பட்டன. இதனால், ஏமப்பேர், அண்ணா நகர், தென்கீரனுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுந்தர விநாயகர் கோவில் தெரு வழியாக கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்தனர்.குறுகலான இந்த சாலையில் ஆட்டோ, கார், டிராக்டர் ஆகிய வாகனங்கள் சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பைபாஸ் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த தெருவும் நேற்று அடைக்கப்பட்டது.இதனால் சேலம் மெயின்ரோட்டில் ஒரு வழியில் மட்டும் வாகனங்கள் செல்வதற்காக 5 நாட்களுக்குப் பிறகு நேற்று தடுப்புகள் அகற்றப்பட்டன. இதனால் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE