கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி, சிதம்பரம் பிள்ளை தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மேல் நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதில், நகராட்சி சார்பில் தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாங்கான இப்பகுதியில் போதிய அளவில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர், அருகில் உள்ள தனது விவசாய கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் விவசாய கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்படும் தண்ணீர், பைப் லைன் மூலம் சிதம்பரம் பிள்ளை தெரு, ேஷர்லி நகர், சுந்தர விநாயகர் கோவில் தெரு மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுந்தரவிநாயகர் கோவில் தெருவின் ஒரு பகுதியில், பைப் லைனில் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே கிடைக்கும் தண்ணீர் வீணாவதைத் தவிர்க்க உடைப்பு ஏற்பட்ட பைப்பை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி, சிதம்பரம் பிள்ளை தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மேல் நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதில், நகராட்சி சார்பில் தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாங்கான இப்பகுதியில் போதிய அளவில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர், அருகில் உள்ள தனது விவசாய கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் விவசாய கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்படும் தண்ணீர், பைப் லைன் மூலம் சிதம்பரம் பிள்ளை தெரு, ேஷர்லி நகர், சுந்தர விநாயகர் கோவில் தெரு மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுந்தரவிநாயகர் கோவில் தெருவின் ஒரு பகுதியில், பைப் லைனில் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே கிடைக்கும் தண்ணீர் வீணாவதைத் தவிர்க்க உடைப்பு ஏற்பட்ட பைப்பை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement