நாமக்கல்; நாமக்கல் அருகே, 'ஸ்டிக்கர்' கடை உரிமையாளர், மர்ம நபர்களால், தலை சிதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 42; திருமணமாகாதவர். அண்ணாநகரில், ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு, கடையை பூட்டிச் சென்றவர், வீட்டுக்கு செல்லவில்லை.நேற்று காலை, 6:30 மணிக்கு, வீட்டில் இருந்து, 300 மீ., துாரத்தில், தலை சிதைக்கப்பட்டு, சடலமாக கிடந்தார்.
எஸ்.பி., அருளரசு நேரில் விசாரணை நடத்தினார். ஜெயகுமார், 2008ல், அ.தி.மு.க, பிரமுகர் கொலை வழக்கில், நாமக்கல் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.மேலும், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், வார்டு உறுப்பினராக, தன் தாயாரை நிறுத்தி, அவர் தோல்வியடைந்தார்.இதனால், பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தேர்தல் முன்விரோதம் காரணமாக, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில், நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE