தஞ்சாவூர்; ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் நிர்வாகியின் தந்தை கொலை வழக்கில், பா.ஜ., நகர தலைவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபாலன், 68. இவர், அங்குள்ள உத்தராதி மடத்தின் பொறுப்பாளராக இருந்தார்.இவரது மகன் வாசுதேவன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மண்டல பொறுப்பாளராக இருந்தவர். கோபாலன் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நின்றபோது, மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார். நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்த பிரச்னையில், நகர, பா.ஜ., தலைவர் சரவணன், ௪௮, கோபாலனை கொலை செய்தது தெரிந்தது. சரவணனை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'மடத்துக்கு சொந்தமான கடையில், சரவணன் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். வாடகை சரியாக கொடுக்கவில்லை.'நீதிமன்றம் மூலம் கடையை காலி செய்ய, மடத்தின் பொறுப்பாளர் கோபாலன் நடவடிக்கை எடுத்தார். அந்த கோபத்தில், கோபாலனை, சரவணன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE