மிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை : 'ரிசர்வ் வங்கியின் அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி, கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: வங்கி கடன் தவணையை திருப்பிச் செலுத்த வேண்டும் என, ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டம், மானுார் கிராமத்தைச் சேர்ந்த, விவசாயி
மிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை : 'ரிசர்வ் வங்கியின் அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி, கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: வங்கி கடன் தவணையை திருப்பிச் செலுத்த வேண்டும் என, ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டம், மானுார் கிராமத்தைச் சேர்ந்த, விவசாயி ராஜாமணி தற்கொலை செய்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி, வங்கிதவணையைச் செலுத்த வேண்டும் என, விவசாயிகளை, வங்கிகள் மிரட்டுகின்றன.



விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்கு காரணமான, வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, உடனே கைது செய்ய வேண்டும்.ரிசர்வ் வங்கியின் அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி, கடன் தவணையை வசூலிக்கும், வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு, விளைநிலங்களை கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.




வாபஸ் பழனிசாமி!


'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:குளறுபடியான புதிய பாடத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, நான் கோரி இருந்தேன். இப்போதாவது, அதை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்து விட்டு, பின் திரும்பப் பெறுவது, இந்த அரசின் வழக்கமாகி விட்டது.லட்சக்கணக்கான மாணவர்களின், எதிர்காலம் சார்ந்த முடிவிலும், இத்தனை அலட்சியமா; சரியான, 'வாபஸ்' பழனிசாமி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

elakkumanan - Naifaru,மாலத்தீவு
07-ஜூலை-202022:58:03 IST Report Abuse
elakkumanan காசு வாங்கி மட்டுமே பழகிப்போன பரம்பரை......................கொடுக்க சொன்னா கோவம் வரத்தானே செய்யும். ..இதையும் குதர்க்கமாவே பாக்காதீங்க.......இனம், ரத்தம், பரம்பரை , வாரிசு, வளர்ப்பு, பழக்க வழக்கம்,.....................இப்பிடி எல்லாத்துக்குமே தலையை குறை சொல்லாதீர்கள்.......................பரீட்சை நிறுத்த, ஓசி மார்க் போட, போட்டி தேர்வு ஊத்தி மூட, வங்கி கடனை கையை கழுவி விட, வளர்ச்சி திட்டத்தை தடுக்க, நல்ல கம்பனியை கமிஷனெல்லாம் வாங்கீட்டு அப்போரமா பூட்டு போட, அந்நிய காசுக்கு நாட்டை கூறு போட, திருட்டை ஒரு பாடமாக பள்ளி கல்லூரிகளில் சேர்க்க, மக்களின் உண்மை உழைப்புக்கு இலவசமா (குழந்தை தவிர பிற அனைத்தும் ) முடிஞ்சவரைக்கும் (கேபிள் டிவி மட்டும் முடியவே முடியாது ).......................இப்பிடி தளபதி உழைப்பு எப்பயுமே ஒரே திசையில்தான்.......................நமக்கு சுய நினைவு இருக்கணும் அதெல்லாம் புரியணும்னா.......................ஒட்டு விற்கும் கூட்டத்துக்கு இதுவே ரொம்ப சாஸ்தி...............கர்மா........................
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-ஜூலை-202018:42:30 IST Report Abuse
vbs manian என்ன இது பாடத்திட்டத்தை எல்லாம் பற்றி பேசுகிறார். தந்தை கொண்டுவந்த சமசீர் கல்வியை விட ஒரு குளறுபடி பேரழிவு இருக்கமுடியுமா. கடன் கொடுத்தால் கேட்க கூடாதா .அது பொது மக்கள் கஷ்டப்பட்டு சேமித்தது.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
07-ஜூலை-202018:39:19 IST Report Abuse
கொக்கி குமாரு என்னமோ தெரியல, சுடலையின் சட்டை காலரை தூக்கிவிட்ட இந்த போட்டோவை பார்க்கும்போதெல்லாம் எனக்கு டக்குனு சிரிப்பு வந்துடுது. தமிழ் சினிமாவில் காமெடியனாக நடிக்க மிகவும் பொருத்தமாக இருப்பார் சுடலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X