புதுடில்லி: கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில், சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார்.
\

இதில் தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றியவருமான சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஐ.பி., எனப்படும் புலனாய்வு துறையும் விசாரணையை துவக்கியுள்ள நிலையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் உண்மையை வெளிவர என்.ஐ..ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE