சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 12) புதிதாக 4,244 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆகவும், பலி எண்ணிக்கை 1,966 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,210 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 34 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 105 ஆய்வகங்கள் (அரசு-53 மற்றும் தனியார் 52) மூலமாக, இன்று மட்டும் 42,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 16 லட்சத்து 09 ஆயிரத்து 448 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,543 பேர் ஆண்கள், 1,700 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 84,535 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 53,912 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 532 ஆக உள்ளது.

வயது வாரியாக பாதிப்பு
இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,966 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 6,843 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,14,757 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16 ஆயிரத்து 870 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE