‛இந்தியாவில் அடுத்தாண்டு கொரோனா பாதிப்பு 6 கோடியை தாண்டும்'

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் அடுத்தாண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று பாதிப்பு மோசமான சூழ்நிலையில் 6.18 கோடியாகவும், சிறந்த சூழ்நிலையில் 37.4 லட்சமாகவும் இருக்குமென இந்திய அறிவியல் நிறுவனம் கணித்துள்ளது.இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 13 மில்லியன் பேர் கொரோனா
India, CoronaVirus, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, Covid-19, IISc, study, இந்தியா, கொரோனா, வைரஸ், பாதிப்பு,  6 கோடி

புதுடில்லி: இந்தியாவில் அடுத்தாண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று பாதிப்பு மோசமான சூழ்நிலையில் 6.18 கோடியாகவும், சிறந்த சூழ்நிலையில் 37.4 லட்சமாகவும் இருக்குமென இந்திய அறிவியல் நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 13 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மில்லியன் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்திய அறிவியல் நிறுவனத்தின் மாதிரி கணிப்பு, தொற்று நோய்களின் கணித மாதிரியில் ஒரு முன்னுதாரண மாற்றம் மற்றும் மார்ச் 23 முதல் ஜூன் 18 வரையிலான காலத்தில் நாட்டில் பதிவான கொரோனா பாதிப்பின் தரவுகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.



latest tamil news

தற்போதைய கொரோனா பாதிப்பின் தரவுகளை எடுத்து கொண்டால், கணிப்பில் வித்தியாசம் இருக்கலாம். மோசமான சூழ்நிலை என்று குறிப்பிடும் போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உச்சத்தை எட்டாது என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது அக்டோபருக்குள் வரலாமென கணிக்கப்பட்டுள்ளது.



புதிய கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாள் ஊரடங்கு இருக்க மாதிரி கணிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதுடன், மற்ற நாட்களில் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வந்தால், தொற்று பரவலை குறைக்க பயனுள்ளதாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.



latest tamil news

இந்தியாவின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் நிலையான முன்னேற்றத்துடன் இருப்பதை குறிப்பிட்டதுடன், உரிய மருத்துவ பராமரிப்பு மற்றும் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இதுவரை தடுப்பூசி கண்டறியப்படாத நிலையில், தொடர்பை தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகள் எனவும் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

INDIAN Kumar - chennai,இந்தியா
17-ஜூலை-202015:41:33 IST Report Abuse
INDIAN Kumar செப்டம்பர் ஓன்று முதல் வேகம் படிப்படியாக குறையும் ராகு கேது பெயர்ச்சி கோரோனோவை விரட்டிவிடும் நல்லதே நடக்கும் என நம்புவோம்.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
16-ஜூலை-202021:06:59 IST Report Abuse
Gnanam இந்திய சித்தர்கள் ஆராய்ந்து அறிந்து எழுதி வைத்திருக்கும் பொக்கிஷங்களை ஒழுங்காக பயன்படுத்தினால் எந்த நோய்க்கும் மருந்து காணலாம்.சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். நோய்களை வெல்வோம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜூலை-202019:15:38 IST Report Abuse
A.George Alphonse அரசு கூறும் அறிவுரைகளை மக்கள் ஒழுங்காக கடைபிட்டித்தால் யாருமே காரோணவுக்கு பலியாக மாட்டார்கள்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூலை-202000:09:23 IST Report Abuse
மதுரை விருமாண்டிகொரோனாவால் இறப்பு எண்ணிக்கை இரண்டு கோடி நிச்சயம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X