7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Updated : ஜூலை 19, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, மாநில கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 7 மாநில
7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, மாநில கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இன்று கலந்துரையாடினார்.



தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, அசாம், பீஹார், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநில முதல்வர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, அந்தந்த மாநிலங்களில, கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அசாம் மற்றும் பீகாரில் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



latest tamil news

அசாமில் 26 மாவட்டங்களை சேர்ந்த 28 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் உயிரிழந்துள்ளனர். 1.18 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் பிரம்மபுத்ராவில் ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கின. 649 முகாம்களில் சுமார் 48 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். காஸிரங்கா தேசிய பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.



தமிழகம், அசாம், பீகார், ஆந்திரா, தெலுங்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பீகாரில் 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 208 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202010:31:40 IST Report Abuse
oce வைரஸ் என்பதை கெட்டன வற்றில் தோற்று விகக முடியும் என்றால் அதை அழிக்க ஏதாவதொரு வழியில் அதை எதிர்த்து தாக்கும் ஒரு வைரஸை கண்டு பிடிக்க முடியும்.அந்த மாற்று வைரஸ் குரோனா பாதித்த ஆளிடம் தொற்றி வைரஸை வைரஸே அழிக்கும் படி கண்டு பிடிக்கலாம்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202010:14:53 IST Report Abuse
  oce எதிலும் ஒரு மாற்று வழி உள்ளது.உலகெங்கும் பரவும் கொடூர வைரஸை சீனா கண்டு பிடித்து ஏவியுள்ளது போல் அந்த தீய சக்தியை எதிர்த்து அழிக்க வல்ல மாற்று வைரஸை உலக நாடுகள் கண்டு பிடித்து குரோனாவை அழிக்க வேண்டும்அது வரை உலகை விட்டு குரோனா போகாது
Rate this:
Cancel
அச்சம் தவிர் தமிழா அடங்க மறு வீறு கொள் வெற்றி நமதே அதனால் தான் இன்று என்றும் இல்லாத அளவு 4979 பேர் உச்சம் இது தேவையா ஒரு வேலை தெரிந்து தான் கெட்டியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X