கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தலை சேர்ந்தவர் பிரசாந்த், 20, எலக்ட்ரீஷியன். இவர், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். நேற்றிரவு, 7:00 மணிக்கு, சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை, இரும்பு ராடால் தாக்கியதில், சிறுமி மயங்கி விழுந்தார். பயந்து போன பிரசாந்த், அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏறி, தற்கொலை செய்யும் நோக்கில், மின் கம்பியை பிடித்ததில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE