லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் காஷ்மீருக்கான அனைத்துக் கட்சி, எம்.பி.,க்கள் குழு, இந்தாண்டு பிப்ரவரியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் செய்தது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும், ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய, டெப்பி ஆப்ரஹாம் என்ற, எம்.பி., தலைமையிலான இந்தக் குழு, இந்தியாவுக்கு எதிராக அறிக்கை அளித்தது. இந்த நிலையில், இந்தக் குழுவுக்கு, பாகிஸ்தான் அரசு, 13.42 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE