சென்னை: ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் நிறைவில், 1.23 கோடி வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த, 2017 ஜூலை, 1ல், நாடு முழுதும், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமலாகி, ஜூன், 30ம் தேதியுடன், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. மூன்று ஆண்டுகளில், 1.23 கோடி வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர். இதுவரை மொத்தம், 48.25 கோடி ஜி.எஸ்.டி., கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 14.42 கோடி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, 930 கோடி பில்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ - வே பில், 129 கோடி பதிவாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE