மும்பை : கொரோனா வைரசில் இருந்து, தான் குணமடைந்துவிட்டதாக வெளியான தகவல்களை, 'பாலிவுட்' நடிகர் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார்.
மஹா., தலைநகர் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், 77, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது, கடந்த வாரம் உறுதிபடுத்தப்பட்டது.அதே நேரத்தில், அவரது மகன், அபிஷேக் பச்சன், 44, மருமகள் ஐஸ்வர்யா ராய், 46, மற்றும் பேத்தி ஆராத்யா, 8, என மூவரும் வைரசால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பல ஊடகங்களில், செய்தி வெளியானது. அந்த தகவல்களை, அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். இதுகுறித்து, 'டுவிட்டரில்' அவர் கூறியுள்ளதாவது:நான் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்து விட்டதாக வெளியான செய்தி தவறானது; பொறுப்பற்றது; போலியானது. இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE