அன்னூர்:தேசிய வருவாய்வழி திறனறிவு தேர்வில் அன்னூர் வட்டாரத்தில், 10 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறன் தேர்வு நடக்கிறது.இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஒன்பது, பத்து, 11, 12ம் வகுப்பு படிக்கும்போது, ஆண்டுக்கு, 12,000 ரூபாய் வீதம், 48 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கெம்பநாயக்கன் பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியின் பாரதிதாசு, தர்சனா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு தலைமையாசிரியர் சாக்ரடீஸ் வாழ்த்து தெரிவித்தார்.வடக்கலூர் நடுநிலைப்பள்ளியில் கனிஷ்கா தேவி, விஷ்ணு, பிரதீப், குமாரபாளையத்தில், நவீன்குமார், ஹரிகரன், பிள்ளையப்பம்பாளையத்தில், கிரிஜா, பொகலூரில், ஷர்மிளா, குன்னத்தூரில், மீனா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE