மூணாறு:கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் மூதாட்டி அம்மிணியை 65, கொலை செய்த கூலித்தொழிலாளி மணி 43, கைது செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே குந்தளம்பாறைச் சேர்ந்தவர் அம்மிணி. கணவர் காமாட்சி தமிழகத்தில் உள்ள நிலையில் வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்த நிலையில் ஜூலை 14ல் அம்மிணி உடல் கிடந்தது.கட்டப்பனை டி.எஸ்.பி. ராஜ்மோகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்த போது அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்த வழக்கில் குந்தளம்பாறை பிரியதர்ஷினி காலனியைச் சேர்ந்த மணியை தேனியில் வைத்து கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: வீட்டில் தனியாக இருந்த அம்மிணியை ஜூலை 2 இரவில் மணி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். கூச்சலிட்டவரை கத்தியால் குத்திக்கொலை செய்தார். உடலை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்து விட்டு காய்கறி லாரியில் தேனிக்கு தப்பினார், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE