திருப்பூர்:கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு, மாவட்டந்தோறும் ஒரே 'மெனு' பின்பற்றப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதில், அரசு டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பாராமெடிக்கல் பணியாளர்கள், பணி நாட்கள் முடிந்தவுடன், தனிமை கண்காணிப்பு மற்றும் ஓய்வில் இருக்கின்றனர்.அப்போது, உணவு மற்றும் தங்கும் வசதி அரசால், நிதி ஒதுக்கீடு செய்து அளிக்கப்படுகிறது. இதுநாள் வரை, மாவட்ட நிர்வாகம் வாயிலாக நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, உணவு பாதுகாப்பு துறையால் உணவு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மருத்துவ பணிகள் துறையினர் கூறுகையில், 'தாலுகா அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியை உணவு பாதுகாப்பு துறை ஏற்படுத்தி வருகிறது.மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறது. அதற்கென, மருத்துவமனை அருகேயுள்ள ஓட்டல்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE