ஈரோடு: அரச்சலூர், ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள், நிகழ்வு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: தீரன் சின்னமலை நினைவு நாள், ஆக.,2ல், காலை, 8:30 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும். மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். தீரன் சின்னமலை வாரிசுதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், அமைப்புகள், சங்கத்தினர், தலா ஐந்து பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். பிற மாவட்டங்களில் இருந்து வரும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பினர், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது), 'கொரோனா தொற்று இல்லை' என்ற சான்று, புகைப்படம், மொபைல் எண், ஆதார் எண் சமர்பித்து இ-பாஸ், அனுமதி பெறலாம். ஈரோடு மாவட்ட, அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர், இதர அமைப்பினருக்கும், இதே விதிமுறை உண்டு. அனுமதி கேட்பவர்கள், வரும், 30ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் உரிய ஆவணங்களை சமர்பித்து, அனுமதி பெற வேண்டும். மணி மண்டபத்தில் அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் தங்கள் கொடி, தோரணங்கள், விளம்பர தட்டி வைக்கக்கூடாது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement