அந்தியூர்: வெள்ளித்திருப்பூர், ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கைலாசம், 26; கடந்த, 2016ல், கோவை சிறப்பு காவல் படை பிரிவு 'சி' கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத நிலையில், பணிக்கு சரிவர செல்லாததால், 10க்கும் மேற்பட்ட முறை மெமோ தரப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். வீட்டிலிருந்த கைலாசம், நேற்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்தார். வீட்டில் இருந்தவர்கள் மீட்டு, அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. மது போதையில் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement