அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது லிங்காபுரம் ஏரி. மழைக்காலங்களில் வாணியாற்றில் வரும் வெள்ள நீர் மற்றும் வாணியாறு அணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஏரி நிரம்பும். இந்த ஏரி நிரம்பியவுடன் அதிலிருந்து, வெளியேறும் உபரிநீர், 1 கி.மீ., தூரத்தில் உள்ள நர்சனேரிக்கு கால்வாய் மூலம் செல்லும். இந்நிலையில், நர்சனேரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், லிங்காபுரம் ஏரியில் தண்ணீர் நிரம்பினாலும், நர்சனேரிக்கு கடந்த சில ஆண்டுகளாக உபரி நீர் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, நர்சனேரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE