புதுடில்லி: இந்தியாவில் 1,600 பேருக்கு கொரோனா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் புனேயைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேயின் சீரம் இன்ஸ்டிடியுட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 'கோவிட்ஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் 2 வது 3வது கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கையை சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.

அந்த வகையில் பரிசோதனைக்கான அனுமதியை வழங்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 18 வயதான 1,600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்திப் பார்க்க அனுமதி கேட்க்ப்பட்டுள்ளது. இந்த அனுமதி சில நாட்களில் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE