வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,199 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது.
இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,141 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் மொத்தம் 58,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பெங்களூருவில் மட்டும் 45,453 பேர் கொரோனா பாதிப்பில் உள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெங்களூருவில் புதிதாக 1,950 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். மாநிலத்தில் ஒரே நாளில் 82 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து இதுவரை அங்கு மொத்தம் 1,886 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

பெல்லாரியில் அதிகபட்சமாக 579 பேரும், மைசூரு மாவட்டத்தில் 230 பேரும், பெங்களூரு புறநகர்ப்பகுதியில் 213 பேரும், தக்ஷின் கர்நாடகாவில் 199 பேரும் உடுப்பி மாவட்டத்தில் 169 பேரும் தொற்றால் புதிதாக பாதிப்பு அடைந்துள்ளனர். கர்நாடகாவின் 30 மாவட்டங்களில் கடந்த ஒரு நாளில் தொற்று அதிகரித்துள்ளது. குறைந்த பட்சமாக கொடகு மாவட்டத்தில் 15 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE