ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,593 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,593 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,059 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 8 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 998 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,332 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் நேற்று நிலவரப்படி, 12,264 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரு நாளில் 15,654 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. அவற்றில் 1,593 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தின் நேர்மறை விகிதம் 0.86சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.3 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை 3,53,425 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE