ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெட்டப்படும் கருவேல மர விறகுகளை வியாபாரிகளிடம் தொழிலாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த விறகுகளை வியாபாரிகள் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.
பெரும்பாலான லாரிகளில் அளவுக்கு அதிகமான உயரத்தில் விறகுகளை ஏற்றி செல்வது ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் கதையாக உள்ளது.ரோட்டின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளில் உரசி அடிக்கடி மின் கம்பி அறுந்து விழுந்து மின் தடை ஏற்படுவது நிகழ்ந்து வருகிறது.
ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விறகு எற்றி சென்ற லாரிகள் மின்கம்பிகளில் உரசி மின்கம்பி அறுந்து மின்தடை ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டது.அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான லாரிகளில் அளவுக்கு அதிகமான உயரத்தில் விறகுகளை ஏற்றி செல்வது ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் கதையாக உள்ளது.ரோட்டின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளில் உரசி அடிக்கடி மின் கம்பி அறுந்து விழுந்து மின் தடை ஏற்படுவது நிகழ்ந்து வருகிறது.
ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விறகு எற்றி சென்ற லாரிகள் மின்கம்பிகளில் உரசி மின்கம்பி அறுந்து மின்தடை ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டது.அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement