திண்டிவனம்; மரக்காணம் ரோட்டில் இருந்து மானுார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.திண்டிவனத்தில் அடுத்த மானுார் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தினந்தோறும் மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். மரக்காணம் ரோட்டில் இருந்து மானுார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.தற்போது, இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்றநிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை புதுப்பிக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த சாலையை விரைந்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE