வெண்ணந்தூர்: வெண்ணந்தூரில், இரண்டு கிராமங்களில் உள்ள குழந்தைகள், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தகவுண்டம்பாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 15 குழந்தைகள், பெரியவர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, சித்தவைத்திய முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, மஞ்சள் காமாலையால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். உடனடியாக சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, அதிகம் பேர் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE