சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 27) அதிகபட்சமாக சென்னையில் 1,821 பேரும், விருதுநகரில் 628 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 474 பேருக்கும், செங்கல்பட்டில் 448 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 362 பேருக்கும், தூத்துக்குடியில் 349 பேருக்கும், விருதுநகரில் 338 பேருக்கும், கோவையில் 313 பேருக்கும், தேனியில் 280 பேருக்கும், ராணிப்பேட்டையில் 273 பேருக்கும், திருவண்ணாமலையில் 267 பேருக்கும், மதுரையில் 249 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு
இன்று சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர், வேலூர், விருதுநகரில் தலா 6 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், கோவை, தென்காசியில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கையில் தலா 2 பேரும், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் என 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,821 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, விருதுநகரில் 628 பேரும், ராணிப்பேட்டையில் 397 பேரும், செங்கல்பட்டில் 282 பேரும், தூத்துக்குடியில் 229 பேரும், திருவள்ளூரில் 211 பேரும், கோவையில் 202 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்

