புதுடில்லி: கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்காலி ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அலுவலக பணிகள் தற்போது தடைபட்டுள்ளன.

வழக்கமான ஓய்வூதியம் வழங்க, ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிகப் பணிக்கொடை தடையின்றி வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இதன்படி, ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரை அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில், ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE