திருப்பூர்:தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, 15.5 சென்ட் நிலம், வாலிபாளையம் பகுதியில் சடையப்பன் கோவில் எதிரே உள்ளது.
திருப்பூரை சேர்ந்த பிரேமா பள்ளி நிர்வாகம், 1975ல் குத்தகை அடிப்படையில் பெற்று, நடத்தி வந்தது.குத்தகை காலம் முடிந்த நிலையில், பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்தது. இதனால், மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில், 1982ல் வழக்கு தொடுத்தது. திருப்பூர் கோர்ட்டிலேயே விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
வழக்கின் முடிவில், 1988ம் ஆண்டு, பள்ளி நிர்வாகம் இடத்தை, மாநகராட்சிக்கு ஒப்படைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. மேல் முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டு, நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி செயற்பொறியாளர் முகமது சபியுல்லா தலைமையில் அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தை மீட்டனர். 38 ஆண்டாக நடந்த இழுபறியில் தற்போது முடிவு ஏற்பட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE