பொள்ளாச்சி:ஆபத்தான நிலையில் உள்ள, உடைந்த மின் மின்கம்பங்களை மாற்றியமைக்க விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், வடக்கிபாளையம் ரோட்டில், கொங்கநாட்டான்புதுார் பிரிவு, புரவிபாளையம் பகுதிகளில் சில மின்கம்பங்கள் உடைந்து, கம்பிகளின் பிடிமானத்தில் நிற்கின்றன.வேகமாக காற்று வீசினால், மின்கம்பங்கள் சாய்ந்து, அருகில் உள்ள வீடுகள் மீது விழும் அபாயம் உள்ளது. அதேபோல, புரவிபாளையத்தை ஒட்டிய, கிணத்துக்கடவு ஒன்றியம், முத்துக்கவுண்டனுார், ரங்கேகவுண்டன்புதுார், வீரப்பகவுண்டனுார் மற்றும் குரும்பபாளையம் செல்லும் வழியில், மின்கம்பங்கள் உடைந்து காணப்படுகின்றன. மின் கம்பம் சரிந்து விபத்து அல்லது அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE