தாம்பரம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, புதை மின்வடங்கள் பதிக்க, நகராட்சி நிர்வாகம் பணம் செலுத்த கோரி, மின் வாரியம் கடிதம் எழுதி உள்ளது.மேற்கு தாம்பரம், கல்யாண் நகரில், தாம்பரம் பெரிய ஏரியை ஒட்டி உள்ள, கழிவு நீரேற்று நிலையம் அருகே, மின்மாற்றி அமைத்து, உயர் மின்வடங்கள் இணைக்க, மின் வாரியம் முடிவு செய்தது.மக்கள் எதிர்த்ததால், நம் நாளிதழில், இம்மாதம், 21ல், இது குறித்து செய்தி வெளியானது. தொடர்ந்து, நகராட்சிக்கு மின் வாரிய அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு பதில், புதை மின்வடங்கள் பதிக்க, மக்கள் கோரிக்கை விடுத்ததால், அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், புதை மின்வடங்கள் பதிக்க, கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின் வாரிய அதிகாரிகள் கடிதம் அனுப்பியது குறித்து, தகவல் தெரியவில்லை. அனுப்பி இருந்தால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.'தினமலர்' செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்//
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE