கோவை:காஸ் சிலிண்டர் நுாதன மோசடி வழக்கில், கைதான ஐந்து பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் ராதா காஸ் ஏஜென்சியில், காஸ் சிலிண்டர் விநியோகத்தில் நுாதன மோசடி நடப்பதாக புகார் வந்தது.அதன் பேரில், பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தனி தாசில்தார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்கள் பெயரில், காஸ் புக் செய்து, சிலிண்டரில் இருந்து, நுாதன கருவி மூலம், வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு காஸ் உறிஞ்சி, ஓட்டல்கள் மற்றும் பேக்கரிக்கு அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 42 சிலிண்டர்கள், மொபட், காஸ் உறிஞ்சும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.காஸ் ஏஜென்சி ஏரியா மேலாளர் சிவகுமார், டெலிவரி ஆட்கள் முருகன், சோமசுந்தரம், ஸ்டாலின், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காஸ் ஏஜென்சி பங்குதாரர்கள் இருவரை தேடி வருகின்றனர். கைதான ஐவரும், ஜாமினில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல், ஐந்து பேரையும் நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE