திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ரோந்து வாகனங்கள் உட்பட, 75 வாகனங்களின் தரப்பரிசோதனை குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள், ரோந்து டூவீலர், 'பேட்ரோல்' வாகனம் உட்பட வாகனங்களை மாதந்தோறும் தரப் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.அதன்படி, போலீஸ் டி.எஸ்.பி.,கள், 'பேட்ரோல்' வாகனம், ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் டூவீலர்களின் தகுதி குறித்து எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ஜெயசந்திரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் வாகனங்களின் தகுதி, உதிரிபாகங்களின் நிலைமை உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டனர். இதன் மூலமாக, 62 டூவீலர், 13 நான்கு சக்கர வாகனங்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE