கோத்தகிரி:
கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை வகித்து, பேசுகையில், ''கொரோனா நோய் தொற்று வராமல் தடுக்க, ஆட்டோ டிரைவர்கள் முகக் கவசம் அணிவதுடன், குடும்பத்தினருடன் கபசுர குடிநீர் அருந்த வேண்டும். வேகமாக செல்வது; மது அருந்திவிட்டு ஆட்டோ இயக்குவது; வாகனம் ஓட்டும் போது, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோத்தகிரியை விபத்தில்லா நகரமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.இதில், தலைமைக் காவலர் ராஜேந்திரன், காவலர் விஜய் ஆனந்த் உட்பட, 30க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE