திருப்பூர்:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தடுப்பில் ஈடுபடும் தற்காலிக துாய்மைப் பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படுவதில்லை.கொரோனா தடுப்பு பணியில், சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும் நேரடியாக சென்று, உடல் நிலை குறித்து விசாரிக்கவும், கிருமி நாசினி தெளிப்பு பணியிலும், தற்காலிக துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக, சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், மாவட்டந்தோறும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தற்காலிக துாய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில், நோய் தடுப்பு பணியும் சுணக்கம் அடைந்து வருகிறது.துாய்மைப் பணியாளர்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தினக்கூலி பணியாளர்களுக்கு, சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வகையில், 350 முதல், 400 ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE