உடுமலை:உடுமலையில், வக்கீல்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை சார்பு நீதிமன்றம் முன், வக்கீல்கள் சங்கம் சார்பில், கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும், குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை வக்கீல்கள் சங்கத்தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சிவக்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE