விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நின்றிருந்த டிப்பர் லாரியின் பின்னால் பைக் மோதிய விபத்தில் தந்தை கண் எதிரே மகன் பரிதாப இறந்தார்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் சரவணன்,45: விழுப்புரம் நகராட்சி ஊழியர். இவர் தனது பைக்கில் மகன் விஷ்ணு ,17: வுடன் விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி பைபாஸில் சென்றார். முண்டியம்பாக்கம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே பைக் சென்ற போது அங்கு சாலையோரம் நின்றிருந்த டிப்பர் லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஷ்ணுவின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சரவணனை விக்கிரவாண்டி போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விஷ்ணு உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தந்தையின் கண்முன்னே மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE