சென்னை : சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
பலத்த காற்று வீசலாம் என்பதால், அடுத்த 4 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் தோவாளைவில் 15 செ.மீ., அவலாஞ்சியில் 10 செ.மீ., கூடலூரில் 9 செ.மீ., பந்தலூரில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE