காரைக்கால் : காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயணம் நடந்தது.
காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் திருக்குளம் வாசலில் ஸ்ரீதண்டாயுதபாணி சன்னதி எதிரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., செயலர் சிவானந்தன், பா.ஜ., மாவட்ட தலைவர் சேனாதிபதி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கந்த சஷ்டியை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து, வீடுகள் தோறும் வேல் கோலமிட்டு, விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement