திண்டுக்கல்:கொரோனா காலத்தில் 150 நாட்களாக பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கி சித்தமருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார் பழநி அரசு மருத்துவர் மகேந்திரன்.
கொரோனா துவங்கியது முதல் இன்றுவரை பொதுமக்களுக்கு காய்ச்சல், தொற்று பாதிக்காமல் இருக்க சேவையாற்றுகிறார். பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம், களப்பணியாளர், தனிமைப் படுத்தப்பட்டோருக்கு கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி ஓமியோபதி மாத்திரைகளை சொந்த ஆர்வத்தில் இலவசமாக வழங்கி வருகிறார்.
தினமும் 100 பேருக்கு மேல் சித்த மருந்துகளை வழங்குகிறார். 250 கிராமங்களுக்கு சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன்,உள்ளூர் பிரமுகர்களின் உதவியோடு முகாம் அமைத்தும் உதவுகிறார். இதுவரை பழநி சுற்று வட்டாரத்தில் 1.50 லட்சம் பேருக்கு உதவியுள்ளார்.
கொரோனாவைக் கண்டு தனியார் மருத்துவமனைகளே நடுங்கும்போது, இவர் தாமாக முன்வந்து உதவுவது பாராட்டுக்குரியதே. மருத்துவர் மகேந்திரன் கூறுகையில், ''நண்பர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியோடு இலவசமாக வழங்கி வருகிறேன். முடிந்த வரை உதவுவதை சேவையாக கருதி செய்கிறேன்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE