தஞ்சாவூர்; அரசு உத்தரவை மீறி, பொது இடத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை, போலீசார் அப்புறப்படுத்தினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர், கும்பகோணம் பழைய பாலக்கரை ஆட்டோ ஸ்டாண்ட் தண்ணீர் பந்தல் கொட்டகையில், ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலர், பாலா ஏற்பாட்டில், 5 அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வந்தனர்
. தகவலறிந்த போலீசார், விநாயகர் சிலையை அப்புறப்படுத்தி, லோடு ஆட்டோவில் ஏற்றி, வீரசைவ பெரிய மடத்தில் ஒப்படைத்தனர். இதற்கு, ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதேபோல, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே மின்னவேட்டுவம் பாளையம் கிராமத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 3.5 அடி உயர விநாயகர் சிலை, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வைக்கப்பட்டது.
தகவலறிந்த கோபி போலீசார் விரைந்தனர். ஹிந்து முன்னணியினரும் திரண்டனர்.'பொது இடத்தில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதியில்லை' என, போலீசார் கூறினர். இதையடுத்து, சிலையை, அதே பகுதியில் உள்ள, தனியார் இடத்துக்கு, ஹிந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE