இந்த செய்தியை கேட்க
சென்னை: திமுக.,வின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. மேலும், பொருளாளராக இருந்த துரைமுருகனும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக.,வில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செப்.,3) மாலை 4 மணியுடன் முடிவடைந்த நிலையில், காலையில் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, பிற்பகல் 3:30 மணியளவில் பொதுச்செயலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்மனுத் தாக்கல் செய்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்பு மனுவையும் முன்வைப்புத் தொகையையும் கட்டி இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. ஆனால் நாளை வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகே இறுதிப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE