சென்னை: டில்லியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பா.ஜ., ராஜா தான் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஹிந்து அறநிலையத் துறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள கோவில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும். அறநிலையத்துறையால் கோவில்களில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. கோவில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது. ஹிந்துக்களை அறநிலையத்துறை சோதிக்கிறது.

மத்திய பா.ஜ., அரசு மீதான குற்றச்சாட்டு, இடிந்த திராவிடத்தின் அழுகிய மூளையின் பேச்சு. ஆன்லைன் வகுப்பால் தற்கொலை நடக்கிறது என கூறுவது அபத்தமானது. காதலால் தற்கொலைகள் நடப்பதால், காதலை தடை செய்ய முடியுமா. ரஜினி பா.ஜ.,வில் சேர்வது குறித்து நான் கருத்து கூற முடியாது. பா.ஜ., கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. டில்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் பா.ஜ., ராஜா தான். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE