சென்னை: இன்னும் எட்டு மாதங்களில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக தி.மு.க., மாறும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியாதாவது: 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறும். துரைமுருகன் டிஆர் பாலுவை பார்க்கும் போது, கருணாநிதியின் முகம்தான் எனக்கு தெரிகிறது. துரைமுருகன் பொது செயலாளர் ஆனதை தெரிந்தால் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். அவர் , படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை உயர்ந்துள்ளனர். 9 முறை எம்எல்ஏ ஆகி சூப்பர் ஸ்டாராக துரைமுருகன் திகழ்கிறார்.

சட்டசபை தேர்தலுக்காக முழுமையாக உழைக்க வேண்டிய நேரம் நெருங்கி கொண்டுள்ளது. அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. அனைத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது. தமிழகத்திற்கு 4.4 லட்சம் கோடி கடன் உள்ளது. இதனை சாதனை என்கின்றனர். இப்படிப்பட்ட அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். உங்கள் ஆசை 8 மாதங்களில் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE